Wednesday, March 19, 2014

நிமிர்ந்து நிற்போம்!


நான் நெடுநாளாக தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில்லை. பொங்கல் வெளியீடு திரைப்படங்களை நான் பார்த்தபோது அவைகளில் கதையம்சம் அவ்வளவாக இல்லை. முன்னணி நடசத்திரங்கள் நடித்திருந்த அந்த இரண்டு படங்களிலும் கதை சரியாகப் பின்னியிருக்கவில்லை. வன்முறையில் தீர்வு என்றபடியே அமைந்திருந்தன. அதுவே மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியாக இருந்திருக்கும்.

அடுத்தாற்போல் காதலர் தினத்தில் வெளியான இது கதிர்வேலன் காதல் படம் பார்த்தபோது உதயநிதி ஸ்டாலின் வன்முறையை படத்திலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார். குடும்பமாய் எல்லோரும் பார்க்கும் ஒரு காதல் கதையாய் அமைந்திருந்தது.

சமீபத்தில் சசிகுமாரின் பிரம்மன் திரைப்படமும் நல்ல கதையம்சத்துடன் வந்திருந்தது.

சமுத்திரக்கனியின் “உன்னை  நீ சரிசெய்துகொள் உலகம் தானாக சரியாகிவிடும்என்ற ஒற்றைவரி முழக்கத்தைத் தாங்கி வந்த நிமிர்ந்து நில் திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது. முதல் பாதியில் டைரக்டர் நம் மனசாட்சியுடன் பேசுகிறார். மிகவும் சிரம்பபட்டு நேர்த்தியாய் படத்தை உருவாக்கி நிமிர்ந்து பார்க்க செய்கிறார். கனியின் இலட்சிய படமாக இது எடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு நகர்வும் சமுதாய மாற்றத்துக்கான தேடுதலை நம் முன் வைக்கிறது. 

படத்தின் பின் பாதியில் தவறு நடந்துவிட்டது என்று நான் சொல்வதற்கில்லை. மற்றவர்களுக்காக கனி தன் வேகத்தை வியாபரத்திற்காக, பொழுதுபோக்கு அம்சத்திற்காக காம்ப்ரமைஸ் செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

கனி ஜெயம் ரவியை நன்றாக செதுக்கியிருக்கிறார். இளம் புயலாகவே வெளிப்படுகிறார். கனி சொல்லவந்த செய்தி படத்தில் இறுதிவரை திசைமாறவில்லைதான். பார்வையாளர்களாக இருக்கும் மக்கள் தேசத்தை உருமாற்றம் செய்ய பங்களிப்பவர்களாக மாறவேண்டும் என்ற ஆதங்கத்தை உணரும்படியான செய்தி மக்களை வெற்றியுடன் சென்றடைந்திருக்கிறது.

No comments: