ரோட்டைக் கடக்கும்போது
பூனைக் குட்டியொன்று
நடுவில் நின்றிருந்தது.
மல்லிகைப் பூப்பந்தையொத்த
வெள்ளை மென்மை உடல்வாகும்
பளிச்சென கண்களும்
கவர்வதாயிருந்தது.
எதிரே வாகனங்கள்
சிக்னலுக்காக காத்திருந்தன.
மாட்டிக்கொள்ளுமே என்றெண்ணி
விரட்ட துவங்கும்போதெல்லாம்..
விலகிக்கொள்வதும் மீண்டும்
மத்தியில் நின்றுகொள்வதுமாக
மகிழ்ந்திருந்தது.
ஏதோ ஆகிவிடுமோவென
மனம் பதைத்து கடக்கையில்
சிக்னல் விழுந்ததும்
'வீல்' குரல்!
- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com
பூனைக் குட்டியொன்று
நடுவில் நின்றிருந்தது.
மல்லிகைப் பூப்பந்தையொத்த
வெள்ளை மென்மை உடல்வாகும்
பளிச்சென கண்களும்
கவர்வதாயிருந்தது.
எதிரே வாகனங்கள்
சிக்னலுக்காக காத்திருந்தன.
மாட்டிக்கொள்ளுமே என்றெண்ணி
விரட்ட துவங்கும்போதெல்லாம்..
விலகிக்கொள்வதும் மீண்டும்
மத்தியில் நின்றுகொள்வதுமாக
மகிழ்ந்திருந்தது.
ஏதோ ஆகிவிடுமோவென
மனம் பதைத்து கடக்கையில்
சிக்னல் விழுந்ததும்
'வீல்' குரல்!
- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com
No comments:
Post a Comment