பூக்கும் காலங்களாயிருந்த
நாட்களில் நேசங்கள்
கொண்டாடின.
சுற்றிலும் மலர்கள்
கூடி நின்று
நேசமொழி பேசிக்கொண்டிருந்தன.
கனாக்களில் பறந்து
நிமிடங்கள் மறந்தன.
வண்ணங்கள் சிதறி
வாசங்கள் சூழ
நேசங்கள் வளர்ந்ந்துகொண்டன.
மழைநாட்களில் நனைந்தும்
ஒதுங்கியும்
காத்து நின்றிருந்தன கணங்கள்.
பூக்களற்ற இந்நாட்களில்
புல்தரையெங்கும்
விரிந்து அடர்ந்து நிற்கிறன
நேசத்திற்கான
நினைவுகள்.
- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com

No comments:
Post a Comment