Tuesday, April 1, 2014

சண்டைக்கோழி


காதல் செய்தபோது
முழுமூச்சாய் தடுத்தும்
பொந்தனே பொருத்தமானவனென்று
சாதித்தாள் பக்கத்துவீட்டு
ஒல்லிப்பொண்ணு.

பிடிவாதத்துடன் மணமேடை ஏறியவள்,
நேற்றிரவு அடைமழையில்
விடாத வீட்டு ஒழுக்குபோல
அவனிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள்.

 அழகானவன் என்ற ஆராதனையின்றி
பொந்தன் என்று வதைக்கும்
அவளின் வார்த்தைகள்.

அடிகள் விழுந்திருக்கக்கூடும்.
அடங்காத அழுகை. விடாத மழை.
சுவர்களைத் தாண்டி நியாயம் கேட்டது
விசும்பல்கள்.

மழையொழுக்கு நின்றிருக்கிறது.
எப்போதாவது பொலபொலவென
ஓட்டுத் துளிகள் சில.

ஒருவேளை
இடைவேளையாய் இருக்கலாம்.

- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com


No comments: