புனித நூல்கள்
திறந்து வைக்கப்பட்டிருந்தன.
தீபங்களும்
ஒளிர்ந்து கொண்டிருந்தன....
வண்ண ஓவியங்கள்
அழகு சொரூபங்கள்
ஒளி வெள்ளத்தில்
மினுங்கி
தெய்வீகத்தைத்
தந்து கொண்டிருந்தன!
நறுமண வாசனைக்
கமழ்ந்து
இசை முழங்கும்
அதிர்வில்
வெண்பளிங்கு திருபீடத்தில்
பிரசன்னமாகிவிட்டது
தெய்வம்!
அருளில் நனைந்து
பரவசமாய் எழுந்த
பக்தனிடம்,
“இன்று மலர்ந்த
உன் இதயத்தின்
பரிசுத்த பூக்கள்
வேண்டும்.”
என்றது தெய்வம்!
இவன் செவிகளில்
விழவே இல்லை!
(c) manoharggs@gmail.com
திறந்து வைக்கப்பட்டிருந்தன.
தீபங்களும்
ஒளிர்ந்து கொண்டிருந்தன....
வண்ண ஓவியங்கள்
அழகு சொரூபங்கள்
ஒளி வெள்ளத்தில்
மினுங்கி
தெய்வீகத்தைத்
தந்து கொண்டிருந்தன!
நறுமண வாசனைக்
கமழ்ந்து
இசை முழங்கும்
அதிர்வில்
வெண்பளிங்கு திருபீடத்தில்
பிரசன்னமாகிவிட்டது
தெய்வம்!
அருளில் நனைந்து
பரவசமாய் எழுந்த
பக்தனிடம்,
“இன்று மலர்ந்த
உன் இதயத்தின்
பரிசுத்த பூக்கள்
வேண்டும்.”
என்றது தெய்வம்!
இவன் செவிகளில்
விழவே இல்லை!
(c) manoharggs@gmail.com
No comments:
Post a Comment